என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை
Byமாலை மலர்29 Nov 2021 4:13 AM GMT (Updated: 29 Nov 2021 7:21 AM GMT)
தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு இன்னும் அமலில் இருந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால், ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படவில்லை.
ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. தமிழகத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ந்தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால், இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தற்போது ஒமிக்கிரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று பயமுறுத்தி வருவதால், ஊரடங்கை நீட்டிப்பதுடன் கொரோனா வழிகாட்டு முறைகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்... பிரசவ வலியுடன் சைக்கிளில் ஆஸ்பத்திரி சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X