search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள்
    X
    மாணவிகள்

    இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    திருவாரூர், நாகை, கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை தகவல்.
    Next Story
    ×