search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கோவையில் புதுப்பெண் மாயம்- போலீசார் விசாரணை

    கோவையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே புதுப்பெண் மாயமானதாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை துடியலூரை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கும், மைசூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் துடியலூரில் வசித்து வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வாலிபர் தனது தந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். 

    புகாரில் தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாகவும், அவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×