என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்28 Nov 2021 7:59 AM GMT (Updated: 28 Nov 2021 7:59 AM GMT)
கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று ஜெயபிரகாஷ் அவரது தந்தை சவுந்தரராஜனிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
புதுக்கோட்டையை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் ஜெயப்பிரகாஷ்(வயது 31). இவர் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வாடகை வீட்டில் தங்கிகொண்டு இடுவாய் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று அவரது தந்தை சவுந்தரராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இப்போதைக்கு பணம் தர முடியாது என அவரது தந்தை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தங்கி இருந்த பிரசாத் வேலை முடிந்து வீடு திரும்பிய போது தூக்கு போட்ட நிலையில் ஜெயப்பிரகாஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X