search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பனியன் நிறுவன உரிமையாளரிடம் பணம் கொள்ளை

    வசந்த்குமார் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வேலம்பாளையம், காவிலிபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர்  வசந்த்குமார் (வயது 39). பனியன் நிறுவன உரிமையாளர்.இவர் அவிநாசியில் உள்ள 2 வங்கிகளில் மொத்தம் ரூ.1.80 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்துள்ளார்.

    பிறகு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைக்கு முன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து வசந்த்குமார் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், கடையின் சி.சி.டி.வி. பதிவை ஆய்வு செய்ததில், வசந்த்குமார் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை  வாலிபர் ஒருவர் திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த வாலிபர் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×