என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனியன் நிறுவன உரிமையாளரிடம் பணம் கொள்ளை
Byமாலை மலர்27 Nov 2021 9:06 AM GMT (Updated: 27 Nov 2021 9:06 AM GMT)
வசந்த்குமார் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வேலம்பாளையம், காவிலிபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் வசந்த்குமார் (வயது 39). பனியன் நிறுவன உரிமையாளர்.இவர் அவிநாசியில் உள்ள 2 வங்கிகளில் மொத்தம் ரூ.1.80 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்துள்ளார்.
பிறகு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைக்கு முன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வசந்த்குமார் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், கடையின் சி.சி.டி.வி. பதிவை ஆய்வு செய்ததில், வசந்த்குமார் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை வாலிபர் ஒருவர் திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த வாலிபர் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X