என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை கோட்டத்தில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் இணைப்பு
Byமாலை மலர்26 Nov 2021 10:35 AM GMT (Updated: 26 Nov 2021 10:35 AM GMT)
மதுரை கோட்டத்தில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை:
மதுரையில் கொரோனாவுக்கு முன்பு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்த பிறகு, அவை முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டு விட்டன.
பொதுமக்கள் முன்பதிவு செய்தால் தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் சில நாட்களுக்கு முன்பு வைகை, பல்லவன், அந்தியோதயா உள்பட 5 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி மதுரை கோட்டத்தில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரெயில்களில் தலா 3 பெட்டிகளும், தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரெயிலில் 6 பெட்டிகளும், நெல்லை - பாலக்காடு பாலருவி விரைவு ரெயில்களில் 4 ரெயில் பெட்டிகளும், மதுரை-புனலூர் ரெயிலில் 4 ரெயில் பெட்டிகளும் இரு மார்க்கங்களிலும் இணைக்கப்பட்டு உள்ளது.
நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரையில் கொரோனாவுக்கு முன்பு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்த பிறகு, அவை முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டு விட்டன.
பொதுமக்கள் முன்பதிவு செய்தால் தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் சில நாட்களுக்கு முன்பு வைகை, பல்லவன், அந்தியோதயா உள்பட 5 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி மதுரை கோட்டத்தில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரெயில்களில் தலா 3 பெட்டிகளும், தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரெயிலில் 6 பெட்டிகளும், நெல்லை - பாலக்காடு பாலருவி விரைவு ரெயில்களில் 4 ரெயில் பெட்டிகளும், மதுரை-புனலூர் ரெயிலில் 4 ரெயில் பெட்டிகளும் இரு மார்க்கங்களிலும் இணைக்கப்பட்டு உள்ளது.
நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X