search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

    திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதால், நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
    தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஆனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

    இதற்கிடையில் தென்தமிழகத்தில் மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. தூத்துக்குடியில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடப்பட்டிருந்த ஆரஞ்ச் எச்சரிக்கை தற்போது ரெட் அலர்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×