என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 வழிச்சாலைக்காக உடுமலையில் பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
Byமாலை மலர்23 Nov 2021 6:54 AM GMT (Updated: 23 Nov 2021 6:54 AM GMT)
தொடர் மழையால் பணியிடத்தில் மழை நீர் தேங்கி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
உடுமலை:
மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தில் பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பொள்ளாச்சி-திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வரையிலான 50.07 கி.மீ., தொலைவுக்கு திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது.
திட்டத்தின் கீழ் மழை நீர் ஓடைகளின் குறுக்கே 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் ஏரிப்பாளையம் ராஜவாய்க்கால் பள்ளம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. தொடர் மழையால் பணியிடத்தில் மழை நீர் தேங்கி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
பின்னர் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதேபோல் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி அருகே பாலம் கட்டுமான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. புறநகர் பகுதியில் ஓடுதளம் அமைக்கப்பட்ட இடங்களில் தார் ஊற்றி சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட சாலைகளுக்கான அணுகுசாலைகளில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X