என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்21 Nov 2021 11:46 AM GMT (Updated: 21 Nov 2021 12:00 PM GMT)
விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்
உடுமலை :
.
திருப்பூர் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள செல்லப்பம்பாளையம் கிராம ஊராட்சியில் 950 மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தண்ணீரின்றி மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடம் முறையிட்ட போது தற்போது அவர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து சீரமைத்தபின்பு குடிநீர் வினியோகம் சீராக இருக்கும் என கூறியுள்ளார்.
ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் உபயோகிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் செல்லப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X