search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளித்து பெண் தற்கொலை
    X
    தீக்குளித்து பெண் தற்கொலை

    திருக்கோவிலூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

    திருக்கோவிலூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மனைவி பூங்கொடி(வயது 45). இவர் தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

    இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்கொடி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கொடி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×