search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜவர்மன் என்பவரை கொல்ல முயன்றதாகவும் புகார் உள்ளது.

    இந்த நிலையில் போலீஸ் தன்னை கைது செய்துவிடக்கூடாது என்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி.

    ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ராஜேந்திர பாலாஜி மீது மோசடி மட்டுமின்றி, கொலை முயற்சி புகாரும் உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 24-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×