search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் மின் மயான ஊழியர் தற்கொலை

    பொதுமக்கள் ரங்கராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
    வெள்ளகோவில்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், கால கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகன் ரங்கராஜ் (வயது 45). இவர் வெள்ளகோவில் நகராட்சி மின் மயானத்தில் தங்கி எரியூட்டும் வேலை செய்து வந்தார். நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டார். 

    உடனே அருகில் இருந்தவர்கள் ரங்கராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ரங்கராஜ் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×