என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வேளாண் எந்திரங்கள் - குறைந்த வாடகையில் வழங்க கோரிக்கை
Byமாலை மலர்18 Nov 2021 6:50 AM GMT (Updated: 18 Nov 2021 6:50 AM GMT)
டிராக்டருடன் இயக்கப்படும் விதைப்பு எந்திரம், தானியங்கள் பிரிக்கும் எந்திரம் ஆகியவற்றை அந்தந்த பகுதியில் விவசாயிகள் வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் பந்தல் சாகுபடி முறையிலும் நடவு முதல் அறுவடை வரை விவசாய தொழிலாளர் தேவை அதிகமுள்ளது.
பல்வேறு காரணங்களால் கிராமங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறித்த நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் சாகுபடியில் பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இப்பிரச்சினையை சமாளிக்க பல்வேறு வேளாண் எந்திரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.
அவ்வகையில் டிராக்டருடன் இயக்கப்படும் விதைப்பு எந்திரம், தானியங்கள் பிரிக்கும் எந்திரம் ஆகியவற்றை அந்தந்த பகுதியில் வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர். தொடர்ச்சியாக காய்கறி சாகுபடி மேற்கொள்பவர்களுக்கு களையெடுத்தல் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இதற்கு தீர்வாக மினி பவர் டிரில்லர், கோனோ வீடர் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் தாங்களாகவே இந்த எந்திரங்களை கொண்டு களையெடுத்தல், குறைந்த பரப்பில் உழவு செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்கின்றனர்.
இதனால் தொழிலாளர் தேவை குறைவதுடன் குறித்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
வேளாண் சாகுபடிக்காக உருவாக்கப்பட்ட சிறிய எந்திரங்கள், தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுகின்றன. சில எந்திரங்களின் விலை அதிகளவு உள்ளதால் அவற்றை சிறு, குறு விவசாயிகள் சொந்தமாக வாங்கி பயன்படுத்த முடிவதில்லை.
எனவே வேளாண் பொறியியல் துறை வாயிலாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு எந்திரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அக்கூட்டமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் எந்திரங்களை வழங்கினால் ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X