search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முன்னெச்சரிக்கையாக அடுத்த இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்: சென்னை மாநகராட்சி

    சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பால், குடிநீர், உணவு, காய்கறி போன்றவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
    சென்னையில் நாளை அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப்பின் பெய்த அதி கனமழையால் சென்னை தத்தளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மழை நின்ற பின்னரும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்தது.

    மழை வெள்ளம் தேங்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு சிரமப்பட்டனர்.

    இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் போன்றவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும், 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற உதவி எண்களையும் வழங்கியுள்ளது.
    Next Story
    ×