என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னெச்சரிக்கையாக அடுத்த இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்: சென்னை மாநகராட்சி
Byமாலை மலர்17 Nov 2021 2:17 PM GMT (Updated: 17 Nov 2021 2:17 PM GMT)
சென்னையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பால், குடிநீர், உணவு, காய்கறி போன்றவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் நாளை அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப்பின் பெய்த அதி கனமழையால் சென்னை தத்தளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மழை நின்ற பின்னரும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்தது.
மழை வெள்ளம் தேங்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு சிரமப்பட்டனர்.
இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் போன்றவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும், 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற உதவி எண்களையும் வழங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X