search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடத்தில் வாகனம் மோதி பனியன் தொழிலாளி பலி

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் சுப்பிரமணியை மீட்டு அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பல்லடம்:

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 63). இவர் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியில் தனியார் பனியன் கம்பெனியில் கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தங்கும் விடுதிக்கு செல்வதற்காக பல்லடம்- உடுமலை ரோட்டை கடக்க முயன்றார். அப்போது  பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி மீது மோதியது. 

    இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .மேலும் இடது கால் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
    Next Story
    ×