search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குன்னத்தூர் பகுதியில் நாளை மின்தடை

    தண்ணீர்பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் ,16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 12-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதன் காரணமாக குன்னத்தூர் தாளபதி, காவுத்தம்பாளையம், வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், 16 வேலம்பாளையம், செட்டிகுட்டை, குறிச்சி எடையபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×