search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரப்படம்
    X
    வானிலை நிலவரப்படம்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்- வானிலை மையம்

    சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்டது.

    அதன்பின் கரையை கடக்கும் திசை மாறியதாக தெரிவித்த வானிலை மையம், கரையை கடக்கும் திசையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என தெரிவித்தது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×