என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 3 பவுன் நகை- பணம் திருட்டு
Byமாலை மலர்10 Nov 2021 10:07 PM GMT (Updated: 10 Nov 2021 10:07 PM GMT)
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 3 பவுன் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள பூண்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் அடகு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் அடகு நகையை எடுத்துக்கொண்டு ஒரு துணிப்பையில் ரூ.32 ஆயிரத்து 714 வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது முகத்தை கழுவுவதற்காக வண்டியில் பணம் மற்றும் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார். முகத்தை கழுவி விட்டு வந்து பார்த்த போது வண்டியில் வைத்திருந்த பணம்-நகை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகானந்தம் தஞ்சை மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X