search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரப் படம்
    X
    வானிலை நிலவரப் படம்

    8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: கனமழை குறித்து இந்திய வானிலை மையத்தின் புதிய அப்டேட்

    சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலை 6 மணிக்கு மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    தற்போது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாளை இடியுடன் கூடிய மிக மிக கனமழை பெய்யும். சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×