என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: கனமழை குறித்து இந்திய வானிலை மையத்தின் புதிய அப்டேட்
Byமாலை மலர்10 Nov 2021 5:06 PM GMT (Updated: 10 Nov 2021 5:06 PM GMT)
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலை 6 மணிக்கு மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
தற்போது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை இடியுடன் கூடிய மிக மிக கனமழை பெய்யும். சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X