search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரெட் அலர்ட் அறிவிப்பு: ரெயில்கள் நேரம் குறித்து அறிய உதவி எண்கள்

    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படும், வந்தடையும் நேர அட்டவணை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.
    சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னைக்கு அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்கள், வந்தடையும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தெரிந்துகொள்ள தெற்கு ரெயில்வே சார்பில் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    044-25330952, 044-25330953, 8300052104 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயணிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்.
    Next Story
    ×