என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சையில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சாவூர்:
புதுக்கோட்டை அடுத்த மாத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இதனால் இவர் தஞ்சையிலேயே தங்கி பணியாற்றி உள்ளார். குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் உள்ளனர்.
இந்த நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மருத்துவக்கல்லூரி சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ராதா கிருஷ்ணன் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டுவதற்காக ராதாகிருஷ்ணன் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்துள்ளது. கடனை அடைக்க முடியாத நிலையில அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன்காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்