search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கனமழை எச்சரிக்கை: கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

    காற்றழுத்தத்தாழ்வு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை கடலூர் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வு, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் (சிதம்பரம்), மதுரை,  திருவள்ளூர், அரியலூர் (கூடுதலாக பெரம்பலூர்), விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×