search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கனமழை எதிரொலி: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    நாளையும், நாளை மறுநாளும் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்தத்தாழ்வு உருவாகியுள்ளதாலும் நாளையும், நாளை மறுநாளும் (நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×