என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 11, 12-ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
Byமாலை மலர்7 Nov 2021 5:53 AM GMT (Updated: 7 Nov 2021 5:53 AM GMT)
அந்தமானுக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே அந்தமானுக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்துவரும் பட்சத்தில் 11 மற்றும் 12-ந்தேதிகளில் (வியாழன், வெள்ளி) சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்.
இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும்பட்சத்தில் மழை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் நேற்று இரவு பெய்த மழைக்கே ரோடு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X