என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தசஷ்டி விழாவிற்காக விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் காப்பு கட்ட அனுமதிக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்
Byமாலை மலர்6 Nov 2021 8:35 AM GMT (Updated: 6 Nov 2021 8:35 AM GMT)
கந்த சஷ்டி விழா துவக்கமான நேற்று காப்புக்கட்டி விரதம் துவக்கலாம் என முருக பக்தர்கள் ஆர்வமுடன் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலிலுக்கு வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் நடக்கவி ல்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது.
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்பூர் கல்யாணசுப்பிரமணியர் கோவில்களில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். கந்த சஷ்டி விழா துவக்கமான நேற்று காப்புக்கட்டி விரதம் துவக்கலாம் என முருக பக்தர்கள் ஆர்வமுடன் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலிலுக்கு வந்தனர்.
கந்தசஷ்டி விழாவு க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பக்தர்கள் காப்பு அணிய அனுமதிக்கப்படவில்லை. உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கவில்லை. இதுதொடர்பாக செயல் அலுவலர் சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கந்தசஷ்டி விழா நடத்த எந்த கோவிலுக்கும் அனுமதியில்லை. மூலவ ருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சி உள் பிரகாரத்தில் நடக்கும். அதற்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கூட்டம் அதிகம் வரும் என்பதால் காப்புக்கட்ட அனுமதியில்லை என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X