search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சம்பள பணம் கொடுக்காததால் கல்குவாரி மேலாளரை விடுதியில் அடைத்து வைத்து தாக்கிய தொழிலாளர்கள்

    குழந்தைசாமி வேலைக்குச் செல்லும்போது தொழிலாளர்கள் இருவரும் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கேட்டு அவரை அடித்து உதைத்துள்ளனர்.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் அருகே குறிச்சியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 52). இவர் ஊத்துக்குளி தாலுகா மொரட்டுபாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 41) என்பவரின் கல்குவாரியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். ‌ 

    இந்த கல்குவாரியில் ஈரோடு மாவட்டம் கெட்டி செவியூரைச் சேர்ந்த சங்கர் என்கிற கருப்புசாமி (44), கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த பிரதீப் (43) ஆகியோர் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள். 

    தற்போது வேலை இல்லாததால் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கல்குவாரி முதலாளியிடம் கேட்டுள்ளார்கள். முதலாளி சம்பளம் கொடுக்காத காரணத்தினால் தீபாவளி பண்டிகையை ஒட்டி குடும்பத்தாருக்கு புது ஜவுளி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

    இந்த நிலையில் நேற்று குழந்தைசாமி வேலைக்குச் செல்லும்போது இருவரும் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கேட்டு அவரை அடித்து உதைத்துள்ளனர். மேலும் குழந்தைசாமியை குன்னத்தூரில் உள்ள தனியார் லாட்ஜிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து மீண்டும் அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த குழந்தைசாமி தனது முதலாளி குமரேசனுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    இதையடுத்து அவர் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி மற்றும் பிரதீப் இருவரையும் கைது செய்து ஊத்துகுளி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 
    Next Story
    ×