search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 பேர் கைது

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). விவசாயி. நேற்று முன்தினம் பாஸ்கர் தனது மோட்டார் சைக்கிளில் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றார். அவர் வயல்வெளி அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வயலை சுற்றி பார்க்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வாலாஜா பகுதியை சேர்ந்த பச்சையப்பன் (47), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நந்திவேடுந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அன்பு (29) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பாஸ்கரிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×