search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தளி பகுதியில் கைதானவர்கள்.
    X
    தளி பகுதியில் கைதானவர்கள்.

    உடுமலையில் சேவல் சண்டை - 13 பேர் கைது

    உடுமலை வள்ளியம்மாள் காலனி ரெயில்வே வழித்தடம் அருகில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உடுமலை:

    உடுமலை திருமூர்த்திநகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்,வினித், கணேஷ், சாமிநாதன், கவுதம், சதீஷ் ஆகிய 6 பேரை தளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 சேவல்கள், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேப்போல் உடுமலை வள்ளியம்மாள் காலனி ரெயில்வே வழித்தடம் அருகில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய ஹரிதாஸ், நந்தகுமார், தம்புராஜ், தமிழ்மணி, நசீர், ராகுல்பிரசாத், சின்னத்துரை ஆகிய 7 பேரை உடுமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல்கள், ரூ.1570 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×