search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடைகளின் பெயர் பலகைகளை முறைப்படுத்த வேண்டுகோள்

    தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வணிக நிறுவன சட்டப்படி நிறுவனத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும்.
    பல்லடம்:

    பல்லடம் நகரில் கடைகளின் பெயர்ப்பலகைகள் உரிய முறையில் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள், ஆய்வு நடத்த சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வணிக நிறுவன சட்டப்படி நிறுவனத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் 5,3,2, என்ற அளவின்படி தமிழ், ஆங்கிலம், மற்றமொழி என்ற வரிசையில் கடைகளின் பெயர்கள் இருக்க வேண்டும்.

    மேலும் அவை ஒரே பலகையில் சீர்திருத்த எழுத்து வடிவில் இடம் பெற வேண்டும் என தமிழக வணிக நிறுவன சட்டமும் வரையறுத்துள்ளது. ஆனால் பல்லடம் நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் இந்த விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் உள்ளது.

    தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற வணிக நிறுவன சட்டத்தை நிறைவேற்றுவதில் சில கடை உரிமையாளர்கள் அலட்சியமாக உள்ளனர். துறை அதிகாரிகளும், பிற மொழி பெயர்ப்பலகை வைத்துள்ள வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் கிடையாது.

    மேலும் கடைகளின் பெயர்ப்பலகைகள் அளவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பெயர்ப்பலகைகள் அச்சுறுத்தும் வகையில் பெரிய அளவில் காணப்படுகின்றது.

    எனவே தமிழக வணிக நிறுவன சட்ட உத்தரவுப்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என தமிழ் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். 

    விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×