search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி - வருகிற 1ந்தேதி தொடங்குகிறது

    எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
    திருப்பூர்:

    திருப்பூர்மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி (குரூப் 2) போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வருகிற 1 - ந்தேதி முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி.(குரூப் 2) தேர்வுக்கான புதிய நேரடி இலவச பயிற்சி வரும் நவம்பர் 1 - ந்தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் ஏற்கனவே எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

    ஆகவே எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×