என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகள் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க சென்றபோது பரிதாபம்- மினி பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
Byமாலை மலர்21 Oct 2021 10:31 AM GMT (Updated: 21 Oct 2021 10:31 AM GMT)
சங்கரன்கோவில் அருகே மகள் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க சென்றபோது மினி பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி மகேஷ்வரி(வயது 45). இவருக்கு மாரீஸ்வரன் என்ற மகனும், கார்த்திகா(20) என்ற மகளும் உள்ளனர்.
பெருமாள்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மாரீஸ்வரன் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திகாவுக்கு வருகிற 24-ந்தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று மகேஷ்வரி கழுகுமலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார். அங்கு ஜவுளி எடுத்துக்கொண்டு மினிபஸ்சில் ஊருக்கு வந்துக்கொண்டிருந்தார். ஊருக்கு அருகே வந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த மகேஷ்வரி, எழுந்து வாசல் படிக்கட்டின் அருகே வந்துள்ளார்.
அப்போது அங்குள்ள சாலை வளைவில் மினிபஸ் வேகமாக திரும்பியதில் மகேஷ்வரி பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குருவிகுளம் போலீசார் மினி பஸ் டிரைவரான கலிங்கப்பட்டியை சேர்ந்த அரங்கநாதன்(22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி மகேஷ்வரி(வயது 45). இவருக்கு மாரீஸ்வரன் என்ற மகனும், கார்த்திகா(20) என்ற மகளும் உள்ளனர்.
பெருமாள்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மாரீஸ்வரன் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திகாவுக்கு வருகிற 24-ந்தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நேற்று மகேஷ்வரி கழுகுமலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார். அங்கு ஜவுளி எடுத்துக்கொண்டு மினிபஸ்சில் ஊருக்கு வந்துக்கொண்டிருந்தார். ஊருக்கு அருகே வந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த மகேஷ்வரி, எழுந்து வாசல் படிக்கட்டின் அருகே வந்துள்ளார்.
அப்போது அங்குள்ள சாலை வளைவில் மினிபஸ் வேகமாக திரும்பியதில் மகேஷ்வரி பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குருவிகுளம் போலீசார் மினி பஸ் டிரைவரான கலிங்கப்பட்டியை சேர்ந்த அரங்கநாதன்(22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X