search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை பகுதியில் நாளை மின்தடை

    இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சின்னப்பன்புதூர், ராஜாவூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர், மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 20 - ந்தேதி 
    ( புதன்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    அதன்படி இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூர் மெட்ராத்தி ஆகிய பகுதிளிலும், மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், வேடபட்டி பகுதியிலும் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×