என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவனூர்புதூர் ஊராட்சியில் தடுப்பணை கட்டும்பணி தீவிரம்
Byமாலை மலர்19 Oct 2021 7:28 AM GMT (Updated: 19 Oct 2021 7:28 AM GMT)
உடுமலை -ஆனைமலை சாலையில் திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையாக அமைந்துள்ள இந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும்.
உடுமலை:
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தேவனூர்புதூர் ஊராட்சி உள்ளது. உடுமலை - ஆனைமலை சாலையில் திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையாக அமைந்துள்ள இந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும்.
இந்த பகுதியில் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் தடுப்பணை கட்டித்தருமாறு விவசாயிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தி.செழியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் பயனாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பணை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பணியும் முடிவடைய உள்ளதால் அதில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் இருப்பு உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X