search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

    வெள்ளகோவிலில் கிராவல் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

    நேற்று இரவு வெள்ளகோவில் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தயது. இதையடுத்து நேற்று இரவு வெள்ளகோவில் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 3 லாரிகளை கைப்பற்றினர். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் கே.வீரன் (வயது 56), சேகர் (48), சரவணகுமார் (22) ஆகியோர்களை கைது செய்தனர்.
    Next Story
    ×