search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வெள்ளகோவில் வாய்க்காலில் ஆண் பிணம் மீட்பு

    தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே வரக்காளிபாளையம் என்ற இடத்தில் கீழ்பவானி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த ஒரு மாத காலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 

    இந்நிலையில் நேற்று கிளை வாய்க்காலில் ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் பாலத்தின் அருகே கிடந்தது.  

    இதுகுறித்து வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×