search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலிபிளவர் பக்கோடா (கோப்பு படம்)
    X
    காலிபிளவர் பக்கோடா (கோப்பு படம்)

    கடையில் வாங்கிய காலிபிளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்

    வாடிக்கையாளர் காலிபிளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது குறித்து உணவு பாதுகாப்பு துறையிலும், திருநின்றவூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ஆவடி:

    திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் காலிபிளவர் பக்கோடா வாங்கி சென்றார்.

    பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டார். அப்போது பக்கோடாவில் காயத்திற்கு ஒட்டப்படும் மெடிக்கல் பேண்டேஜ் ரத்தத்துடன் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கடைக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் காலிபிவளர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது குறித்து உணவு பாதுகாப்பு துறையிலும், திருநின்றவூர் போலீசிலும் புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×