என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் எத்தலப்பருக்கு சிலை அமைக்க அமைச்சர்கள் ஆய்வு
Byமாலை மலர்15 Oct 2021 7:31 AM GMT (Updated: 15 Oct 2021 7:31 AM GMT)
சுதந்திர போராட்ட வீரர் மலையாண்டி வேங்கடபதி எத்தலப்பருக்கு தளியில் நினைவரங்கம் மற்றும் உடுமலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
உடுமலை:
சுதந்திர போராட்ட வீரர் மலையாண்டி வேங்கட பதி எத்தலப்பருக்கு தளியில் நினைவரங்கம் மற்றும் உடுமலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்ய தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடுமலையில் ஆய்வு செய்தனர்.
சிலை அமைக்க உடுமலை தளி ரோடு மேம்பாலம் அருகே நகராட்சி அலுவலக வளாகம் ,உழவர்சந்தை ஆகிய 2 இடங்கள் பார்வையிட்டனர்.
இதில் ஒரு இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நகராட்சி திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் வினீத் ,செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், வருவாய் கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம் ,வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் இல. பத்மநாபன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் மத்தின் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X