search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    மாங்காடு அருகே 3 கடைகளில் பயங்கர தீவிபத்து

    மாங்காடு அருகே 3 கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 20 மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமடைந்தது.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கம். இவர் சிக்கராயபுரம் பிரதான சாலையில் மரக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு இவரது மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்து அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை மற்றும் ஓட்டலுக்கும் பரவியது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பூந்தமல்லி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் இருந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 3 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

    மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் நிறுத்தி வைத்திருந்த இருபது மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது. மேலும் அங்கிருந்த ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் தீயில் எரிந்து நாசமானது.

    இந்த தீ விபத்தால் குன்றத்தூர்- குமணன்சாவடி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×