என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி
Byமாலை மலர்11 Oct 2021 1:46 PM GMT (Updated: 11 Oct 2021 1:46 PM GMT)
கொடைரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
கொடைரோடு அருகே உள்ள காமலாபுரம் கிழக்கு தோட்ட பகுதியை சேர்ந்தவர் சவரி அம்மாள் (வயது 85). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சவரி அம்மாளின் உடலை மீட்டனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X