என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு
Byமாலை மலர்10 Oct 2021 10:50 AM GMT (Updated: 10 Oct 2021 10:50 AM GMT)
14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 7 வார்டு உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டத்தில் 12 பதவிகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 68.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காங்கயம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சியின் 10 - வது வார்டு உறுப்பினார் , தாராபுரம் ஒன்றியத்தில் 12 - வது வார்டு உறுப்பினர், அவிநாசி ஒன்றியத்தில் கருவலூர் ஊராட்சி தலைவர், மூலனூர் ஒன்றியத்தில் எரிசினம்பாளையம் ஊராட்சி தலைவர், உடுமலை ஒன்றியத்தில் எஸ்.வேலூர் ஊராட்சி தலைவர் என 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
மேலும் 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 7 வார்டு உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 140 வாக்குச்சாவடிகளும், 17 மண்டலக் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
காங்கயம், வெள்ளக்கோவில், அவிநாசி, மூலனூர், பல்லடம் வட்டாரங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் வீடியோ மூலமாக கண்காணிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 39,079, பெண் வாக்காளர்கள் 41,509, திருநங்கைகள் 4 பேர் என மொத்தம் 80,592 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 27,452 பேரும், பெண் வாக்காளர்கள் 27,730 பேரும், திருநங்கை ஒருவர் என மொத்தம் 55,183 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 70.24 சதவீதம் பேரும், பெண்கள் 66.8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர் .
இதன் மொத்த சராசரி 68.47 சதவீதம் ஆகும்.தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X