என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டியில் தாய்- 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்9 Oct 2021 9:16 AM GMT (Updated: 9 Oct 2021 9:16 AM GMT)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய் மற்றும் 2 மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமன்.
இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர்களது மகள்கள் யுவராணி (21), நித்யா (17). யுவராணி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டும், நித்யா பிளஸ்-2 படித்து வந்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்து மாரி தனது 2 மகள்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் காலை முத்துமாரியின் தாய் கோமதி மற்றும் அவரது மகன் ஆகியோர் இன்று முத்துமாரி வீட்டுக்கு சென்றனர். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முத்துமாரி, யுவராணி, நித்யா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று தாய், மகள்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துமாரிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் முத்துமாரியிடம் இருந்து நகைகளையும் வாங்கி கொண்டு அதை திருப்பி கொடுக்காமல் உள்ளதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமன்.
இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர்களது மகள்கள் யுவராணி (21), நித்யா (17). யுவராணி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டும், நித்யா பிளஸ்-2 படித்து வந்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்து மாரி தனது 2 மகள்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் காலை முத்துமாரியின் தாய் கோமதி மற்றும் அவரது மகன் ஆகியோர் இன்று முத்துமாரி வீட்டுக்கு சென்றனர். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முத்துமாரி, யுவராணி, நித்யா ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று தாய், மகள்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துமாரிக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் முத்துமாரியிடம் இருந்து நகைகளையும் வாங்கி கொண்டு அதை திருப்பி கொடுக்காமல் உள்ளதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X