search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பல்பொருள் அங்காடியில் ரூ.75 ஆயிரம் திருட்டு- போலீசார் விசாரணை

    திண்டிவனத்தில் பல்பொருள் அங்காடியில் ரூ.75 ஆயிரம் பணம் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இங்கு திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த பாலகுரு(52) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாலகுரு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கல்லாபெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரத்தை காணவில்லை. அப்போது தான் நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கல்லாபெட்டியில் இருந்த பணத்தையும், கண்காணிப்பு கேமராவில் பதிவான ‘ஹார்டு டிஸ்க்’கையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×