என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை சைனிக் பள்ளியில் முதல் முறையாக மாணவிகள் சேர்க்கை
Byமாலை மலர்8 Oct 2021 7:19 AM GMT (Updated: 8 Oct 2021 7:19 AM GMT)
பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி, குதிரையேற்ற பயிற்சி, மலையேற்ற பயிற்சி, பாராசூட் பயிற்சி, கப்பல், விமான மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி 1969-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின்கீழ் படித்து வரும் இப்பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி, குதிரையேற்றப் பயிற்சி, மலையேற்றப் பயிற்சி, பாராசூட் பயிற்சி, கப்பல், விமான மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
6ம் வகுப்பு, 9ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வுகளை நடத்தி சைனிக் பள்ளி நிர்வாகம் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன்படி 2021-22ம் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 6 ம் வகுப்பில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த 12 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியில் சேர்ந்த மாணவிகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் வரவேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X