search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - விவசாயி கைது

    ராமசாமிக்கும், குமாரசாமிக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக குமாரசாமி வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள செல்வகுமார கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது65). இவர் நேற்று முன்தினம் கரூர் சென்றுவிட்டு மாலை பஸ்சில் அய்யம்பாளையத்திற்கு வந்தார். லட்சுமியை அழைத்துச்செல்ல அவரது கணவர் ராமசாமி வந்திருந்தார். 

    இந்தநிலையில் அங்கு வந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த குமாரசாமி (68) என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமசாமியை வெட்ட முயன்றார். அதனை லட்சுமி தடுத்ததில் அவரது தலையில் வெட்டு விழுந்தது. 

    காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    ராமசாமிக்கும், குமாரசாமிக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக குமாரசாமி வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் குமாரசாமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  
    Next Story
    ×