search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆத்தூர் அருகே மீன் வியாபாரிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

    ஆத்தூர் அருகே மீன் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி குருவித்துறை பரதர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (57). மீன் வியாபாரி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது முக்காணி பகுதியில் செல்லும்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வண்ணமுத்து (36) என்பவர் வழிமறித்துள்ளார். அவர் பாஸ்கரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். உடனே பாஸ்கர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்துள்ளனர். இதனால் வண்ணமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவம் பற்றி ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்ணமுத்துவை கைது செய்தனர்.

    Next Story
    ×