என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- டிரைவர் பலி
Byமாலை மலர்1 Oct 2021 10:07 AM GMT (Updated: 1 Oct 2021 10:07 AM GMT)
புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புளியங்குடி:
புளியங்குடி சிந்தாமணி சான்றோர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 37). இவர் அங்குள்ள விவசாய பண்ணையில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மோட்டார் சைக்கிளில் சிந்தாமணியில் இருந்து வாசுதேவநல்லூர் செல்லும் போது கரூரில் இருந்து தென்காசிக்கு சிமெண்ட் ஏற்றி கொண்டு வந்த லாரி சிந்தாமணி தனியார் மருத்துவமனை அருகில் மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் கோபால கிருஷ்ணனின் கை கால்கள், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரது உறவினர்கள் முதலுதவிக்கு தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இறந்த கோபால கிருஷ்ணனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இது சம்பந்தமாக லாரி டிரைவரான விருதுநகர் செல்வபாண்டி (31) மீது வழக்குப்பதிவு செய்து புளியங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புளியங்குடி சிந்தாமணி சான்றோர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 37). இவர் அங்குள்ள விவசாய பண்ணையில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மோட்டார் சைக்கிளில் சிந்தாமணியில் இருந்து வாசுதேவநல்லூர் செல்லும் போது கரூரில் இருந்து தென்காசிக்கு சிமெண்ட் ஏற்றி கொண்டு வந்த லாரி சிந்தாமணி தனியார் மருத்துவமனை அருகில் மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் கோபால கிருஷ்ணனின் கை கால்கள், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரது உறவினர்கள் முதலுதவிக்கு தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இறந்த கோபால கிருஷ்ணனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இது சம்பந்தமாக லாரி டிரைவரான விருதுநகர் செல்வபாண்டி (31) மீது வழக்குப்பதிவு செய்து புளியங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X