என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னத்தூர் அருகே பரிதாபம் - இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்30 Sep 2021 12:10 PM GMT (Updated: 30 Sep 2021 12:45 PM GMT)
பொதுமக்கள் குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தொரவலூர் ரோடு நடராஜ புரத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 25). இவரது மனைவி நந்தினி(21). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஈஸ்வரி(2), திவ்யா(1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பிரபு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் நந்தினி கோபித்து கொண்டு அவ்வப்போது அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நந்தினி வழக்காடு கிராமம் ஒருக்காம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதையடுத்து நேற்று இரவு பிரபு ஒருக்கம்பாளையம் சென்று மனைவியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை நந்தினி தூக்கில் தொங்கிக் கொண்டி ருப்பதாக அவரது மகள் ஈஸ்வரி அழுதவாறு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது நந்தினி நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அருகில் கணவர் பிரபு குடிபோதையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து உடனே பொதுமக்கள் குன்ன த்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபு, நந்தினிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக பிரபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் நந்தினி மரணம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் நந்தினிக்கு திருமணமாகி 3 வருடங்கள் மட்டுமே ஆவதால் திருப்பூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X