என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுடு தண்ணீர் போட்ட போது தீ பற்றியதில் உடல் கருகிய மாணவி பலி
Byமாலை மலர்28 Sep 2021 8:34 AM GMT (Updated: 28 Sep 2021 9:33 AM GMT)
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று யமுனாதேவி மீது பற்றிய தீயை அணைத்தனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 44). இவரது மகள் யமுனாதேவி (15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் சுடுதண்ணீர் போடுவதற்காக யமுனாதேவி விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது தீ சரியாக பிடிக்காததால் மண்எண்ணையை எடுத்து ஊற்றியுள்ளார்.
அப்போது அவரது உடையில் தீப்பற்றியதில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று யமுனாதேவி மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யமுனாதேவி இறந்தார். இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X