என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூர், கன்னிவாடி பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்27 Sep 2021 8:27 AM GMT (Updated: 27 Sep 2021 8:27 AM GMT)
மூலனூர் பகுதியில் அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சி காட்டுவலசு, வெங்கிக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
தாராபுரம்:
தாராபுரம் மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் அதன் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
எனவே இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
அதன்படி மூலனூர் பகுதியில் அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சி காட்டுவலசு, வெங்கிக்கல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கா நாயக்கன்பட்டி, பெரமியம், கிளாங்குண்டல், பெருமாள்புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மேலும் கன்னிவாடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்க்கவுண்டம்பாளையம், கன்னிவாடி, நஞ்சை தலையூர், புஞ்சை தலையூர், மணலூர், பெருமாள் வலசு உள்ளிட்ட பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்படும் என தாராபுரம் கோட்ட மின்வாரிய நிர்வாக செயற்பொறியாளர் பாலன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X