என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோட்டாரில் இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2021 9:56 AM GMT (Updated: 24 Sep 2021 9:56 AM GMT)
கோட்டாரில் தாயார் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
கோட்டார் சுமை தாங்கி அம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் அஜிதா (வயது 21).
இவர், கம்பளத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அஜிதா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் அஜிதாவிடம் விசாரித்தார். அப்போது அஜிதா, தோழி ஒருவருடன் வெளியில் சென்று இருந்ததால் தாமதமாகி விட்டதாக கூறினார்.
இதையடுத்து அஜிதாவை அவரது தாயார் கண்டித்தார். மனம் உடைந்து காணப்பட்ட அஜிதா, வீட்டில் யாருடனும் பேசவில்லை. இந்த நிலையில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் அஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அஜிதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோட்டார் சுமை தாங்கி அம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் அஜிதா (வயது 21).
இவர், கம்பளத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அஜிதா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் அஜிதாவிடம் விசாரித்தார். அப்போது அஜிதா, தோழி ஒருவருடன் வெளியில் சென்று இருந்ததால் தாமதமாகி விட்டதாக கூறினார்.
இதையடுத்து அஜிதாவை அவரது தாயார் கண்டித்தார். மனம் உடைந்து காணப்பட்ட அஜிதா, வீட்டில் யாருடனும் பேசவில்லை. இந்த நிலையில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் அஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அஜிதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X